search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிப்பு"

    திருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த 13 வயது சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம் செய்தனர். தப்பி ஓடிய தோழியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #trichycauveryriver #girlmolestation

    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக வந்த டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 5-ந்தேதி இரவு கஞ்சா மற்றும் குடிபோதையில் 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பெற்றோர்களே, அந்த 4 பேரையும் வெளியே விடுங்கள், நாங்கள் கொன்று விடுகிறோம் என்று கூறுமளவிற்கு நடந்த இந்த கொடூர சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    திருச்சி ஸ்ரீரங்கம், யாத்திரி நிவாஸ் பகுதியைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய சிறுமி நேற்று மாலை அங்கு உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அவருடன் 18 வயது தோழியும் சென்றார். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடினாலும் நிறைந்த மனதுடன் அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர்.

    அதே சமயம் ஆற்றில் தண்ணீர் ஓடாமல் மணல் திட்டாக இருக்கும் இடத்தில் 4 வாலிபர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர். தலைக் கேறிய போதையில் தங்களை மறந்த வாலிபர்களின் பார்வை ஆற்றில் குளித்த சிறுமி மற்றும் அவரது தோழி மீது பட்டது.

    காலியான மது பாட்டில்களை தூக்கி எறிந்துவிட்டு சிறுமிகள் குளிக்கும் இடத்திற்கு வந்தனர். போதையுடன் காமமும் தலைக்கேறிய அவர்கள் குளித்துக்கொண்டு இருந்தவர்களின் கைகளை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது சிறுமியின் தோழி அந்த கும்பலிடம் இருந்து தப்பினார்.

    ஆனால் 13 வயது சிறுமியால் அந்த காம கொடூர வாலிபர்களிடம் இருந்து தப்ப முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

    இதற்கிடையே அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமியின் தோழி, ஊருக்குள் சென்று அந்த வாலிபர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது குறித்து கூறி காப்பாற்றும் படி கதறினார். உடனே பொதுமக்கள் அங்கு சென்று இளைஞர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். அப்போது 2 வாலிபர்கள் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பாலு மற்றும் மகேஷ் என தெரியவந்தது.

    பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அந்த சிறுமிக்கு பரிசோதனை நடக்கிறது. பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரிடமும் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ரவிச்சந்திரன். இன்ஸ்பெக்டர்கள் உமா சங்கர், மும்தாஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    அப்போது 2 பேர் மட்டுமே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற 2 பேர் யாரும் வருகிறார்களா என புதருக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறினர். அந்த 2 பேர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வாலிபர்களிடம் இருந்து தப்பித்த சிறுமியின் தோழியிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் இதில்அதிரடி தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. #trichycauveryriver #girlmolestation

    கும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #delhiwomanmolestation #autodriverarrested

    கும்பகோணம்:

    டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 2-ந்தேதி வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணத்துக்கு ரெயில் மூலம் வந்தார்.

    ஓட்டலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினார். அந்த ஆட்டோ டிரைவர், இளம்பெண் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்லாமல் நகர் முழுவதும் சுற்றி வந்தார். சந்தேகம் அடைந்த இளம்பெண், ஆட்டோ டிரைவரிடம் கேட்டதற்கு வாக்குவாதம் செய்து செட்டிமண்டபம் பைபாஸ் ரோட்டில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார்.

    நள்ளிரவில் தனியாக நடந்து வந்த இளம் பெண்ணை பார்த்ததும் அங்கு நின்ற 2 வாலிபர்களுக்கு சபலம் ஏற்பட்டது. இளம்பெண்ணிடம் நைசாக பேசி, மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறினர். இதை நம்பி இளம்பெண்ணும் அவர்களுடன் சென்றார்.

    2 வாலிபர்களும், இளம்பெண்ணை ஆள்நட மாட்டமில்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். தனது நண்பர்கள் 2 பேருக்கும் செல்போன் மூலம் பேசி அழைத்தனர். 4 வாலிபர்களும் அந்த இளம் பெண்ணை கற்பழித்தனர்.


    பிறகு 4 பேரும், ஆட்டோவில் இளம்பெண்ணை ஓட்டல் அருகே கொண்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வசந்த், தினேஷ், புருசோத்த மன், அன்பரசன் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது காலில் காயம் அடைந்த வசந்த், தினேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கற்பழிப்பு வழக்கில் கைதான 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.

    இந்த வழக்கில் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி இளம்பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவர் எதற்காக ஒரு மணி நேரம் ஆட்டோவில் வைத்து சுற்றினார் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.

    ஆட்டோ டிரைவர் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து கொண்டு இருந்தார். போலீசார், ஆட்டோ டிரைவரை பிடிக்க தீவிரம் காட்டினர்.


    ரெயில் நிலைய பகுதியில் காமராஜர் சாலை, புதிய பஸ் நிலைய பகுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

    கும்பகோணத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ டிரைவர் மட்டும் வித்தியாசமாக தனது ஆட்டோவின் முன் பக்கத்தில் இருந்த பம்பர், ஹாரன், மற்றும் கண்ணாடியை மாற்றி பழைய ஆட்டோவைப் போல் டிசைன் செய்து இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    அந்த ஆட்டோ யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். பக்கத்து ஊர்களிலும் சென்று ஆட்டோவை தேடினர்.

    அப்போது திருவிடைமருதூர் திருப்பணிபேட்டை யில் அந்த ஆட்டோ நின்று இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அதன் டிரைவர் குருமூர்த்தி (வயது25) என்பவரை நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கும்பகோணம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் போலீசாரிடம் கூறுகையில், “சம்பவத்தன்று ரெயில் நிலையத்தில் சவாரியை இறக்கி விட்டு திரும்பியபோது இளம்பெண் ஆட்டோவை நிறுத்தி ஓட்டலில் விடுமாறு ஆங்கிலத்தில் கூறினார். நானும் அவர் சொன்னபடி ஆட்டோவில் ஏற்றிச் சென்றேன். வழியில் தகராறு ஏற்பட்டதால் நடுவழியில் இறக்கி விட்டதாக ஒப்புக் கொண்டார்.

    கண்காணிப்பு கேமிரா மூலம் ஆட்டோவை போலீசார் தேடுவதை அறிந்து தனது ஆட்டோவின் முன் பகுதியை மாற்றினேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இவருக்கு வாலிபர்களுடன் தொடர்பு உள்ளதா? தன்னை நம்பி ஆட்டோவில் ஏறிய பெண்ணை நடுரோட்டில் ஏன் இறக்கி விட்டார்? என்பது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. #delhiwomanmolestation #autodriverarrested

    கும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். #delhiwomanmolestation #bankwomanmolestation

    கும்பகோணம்:

    டெல்லியைச் சேர்ந்த 23 வயது வங்கி பெண் ஊழியர் கும்பகோணத்துக்கு பயிற்சிக்கு வந்த போது 4 பேர் கொண்ட போதை இளைஞர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.

    நள்ளிரவில் ரெயிலில் வந்து இறங்கிய அந்தப் பெண் ஓட்டலில் தங்கி இருந்த தோழியை ரெயில் நிலையத்துக்கு அழைத்தார். மழை பெய்ததால் ஆட்டோ பிடித்து ஓட்டலுக்கு வருமாறு கூறி விட்டனர். இதனால் டெல்லி பெண் அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஓட்டலுக்கு செல்லுமாறு கூறினார்.

    டெல்லி பெண்ணுக்கு தமிழ் தெரியாததால் ஆட்டோ டிரைவர் வேறு பாதை வழியாக சென்று அலைக்க கழித்தார். இதனால் அந்தப் பெண் கூச்சல் போடவே நடுவழியில் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்று விட்டார்.

    அதன் பிறகுதான் அவர் போதை கும்பலில் சிக்கினார். ஆட்டோ டிரைவர் மட்டும் அந்தப் பெண்ணை ஓட்டலில் கொண்டு போய் சேர்த்து இருந்தால் இந்த சம்பவமே நடந்து இருக்காது. இதனால் ரெயில் நிலையத்தில் டெல்லி பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


    கற்பழிப்பு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த அட்டோ டிரைவர் மாயமாகி விட்டார். நேற்று கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டும் 100-க்கும் மேற்பட்ட டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்களின் செல்போன் எண், ஆட்டோ எண், லைசென்ஸ் எண், வீட்டு முகவரி போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டனர்.

    2-ந்தேதி நள்ளிரவு ரெயில் நிலையத்துக்கு ஆட்டோ கூட்டிச் சென்றது யார் என்று அவர்களிடம் சரமாரி கேள்வி கேட்டு விசாரணை நடத்தினர்.

    மாயமான ஆட்டோ டிரைவர் வெளியூரைச் சேர்ந்தவரா? உள்ளூரில் ஆட்டோ ஓட்டுபவரா? இரவில் ஓட்டுவதால் உரிய லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுபவரா? என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.

    டெல்லி பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட அவர், பணம் கூட வாங்காமல் ஆளை விட்டால் போதும் என்று தப்பிச் சென்று விட்டார். எனவே அவரும் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? கைதான வாலிபர்களுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடக்கிறது.

    முதன் முதலில் ஆட்டோவில் ஏறும்போது டிரைவரை டெல்லி பெண் நன்கு பார்த்து இருக்கிறார். அவரிடம் ஓட்டல் பெயரை ஆங்கிலத்தில் கூறி இருக்கிறார். இதனால் சில நிமிடங்கள் டிரைவரை டெல்லி பெண் பார்த்து இருக்கிறார். அவரால் ஆட்டோ டிரைவரை அடையாளம் காண முடியும்.

    எனவே சந்தேகப்படும் ஆட்டோ டிரைவர்களை பெண் முன் நிறுத்தி அடையாளம் காட்டச் சொல்லலாமா? என்றும் போலீசார் ரகசியமாக ஆலோசித்து வருகிறார்கள்.

    ஆட்டோ சென்ற பாதையில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்த போது அதில் பல கேமிராக்கள் செயல்படாமல் இருப்பது தெரியவந்தது. கஜா புயலில் கண்காணிப்பு கேமிரா இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களில் புருஷோத்தமன், அன்பரசன் ஆகியோர் மருத்துவபரிசோதனைக்கு பின்னர் திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு 19 வயதே ஆவதால் முதலில் அவர்கள் தஞ்சை சீர்நோக்கு சிறைக்கு அனுப்பபட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் 2013-ம் ஆண்டு சட்ட திருத்ததின்படி அவர்கள் மேஜராக கருதுப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் கைதான வசந்த், தினேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிள் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக பாபநாசம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது.

    தினேஷ் செல்போனில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கைதானவர்களிடம் வழக்கில் குற்றத்தை நிரூபிக்க தேவையான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள், போலீசார் ஒத்துழைப்புடன் நேற்று மேற்கொண்டனர். இதில் ஆண்மை பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.

    முன்னதாக பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட வங்கி பெண் ஊழியர், கும்பகோணம் பெண் நீதிபதியிடம் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். நீதிபதி, அவரிடம் தனி அறையில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.

    அதில் அவர் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அவற்றை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்து கொண்டார். #delhiwomanmolestation #bankwomanmolestation

    டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கும்பகோணத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தினேஷ், அன்பரசு, வசந்த், புருசோத்தமன் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். #kumbakonamdelhigirlmolestation

    கும்பகோணம்:

    டெல்லி பெண்ணை 4 வாலிபர்களும் மிக கொடூரமாக இரக்கமற்ற முறையில் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக டெல்லியில் இருந்து வந்த அந்த பெண் எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார்.

    சென்னையில் இருந்து புறப்பட்டதும் ஏற்கனவே கும்பகோணத்தில் தங்கி பயிற்சி பெற்றுவரும் சக தோழிகளிடம் தான் வரும் விபரத்தை சொல்லி டூவீலரில் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வரச்சொல்லி இருக்கிறார்.

    இரவு 10.20 மணிக்கு கும்பகோணத்தில் இறங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அந்த பெண்களால் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடிய வில்லை. அவர்களிடம் ஓட்டல் முகவரியை வாங்கி ஆட்டோவில் செல்ல முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில் ரெயில் நிலையத்தில் ஆட்டோக்கள் இல்லை. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டோ பயணிகளை இறக்கிவிட்டது.

    அந்த ஆட்டோ டிரைவரிடம் சென்று கேட்டுள்ளார். அவர் அந்த பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார். அந்த பெண் செல்ல வேண்டிய ஓட்டல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1½கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாகியும் ஆட்டோ ஓட்டலை சென்றடைய வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் கத்தி இருக்கிறார்.

    உடனே அந்த ஆட்டோ டிரைவர் செட்டிப்பள்ளம் பைபாஸ் ரோட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார். நள்ளிரவில் நடு ரோட்டில் தவித்த அந்த பெண் டிராலிபேக்கை இழுத்தபடி நடந்து சென்றுள்ளார்.


    தன்னந்தனியாக வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் வந்ததைப் பார்த்ததும் தினேஷ் அருகில் சென்று அந்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேசி எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் ஓட்டல் விலாசத்தை கூறியதும் நாங்கள் கொண்டுவிடுகிறோம் என்று கூறி இருக்கிறான். அதை நம்பி அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி இருக்கிறார். அதே பைக்கில் வசந்தும் ஏறிக்கொண்டான்.

    நம்பி சென்ற இளைஞர்கள் இப்படி நாசம் செய்வார்கள் என்று அந்த பெண் நினைக்கவில்லை. இவர்கள் 4 பேரும் படித்த வேலை இல்லாத இளைஞர்கள். தினேஷ் மட்டும் வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலை செய்கிறார்.

    அன்று இரவு ஒரு குவார்ட்டர் பாட்டில் மதுவை வாங்கி 4 பேரும் குடித்து விட்டு, கஞ்சா புகை பிடித்து இருக்கிறார்கள். போதை தலைக்கேறி இருந்த நேரத்தில் தான் டெல்லி பெண் அவர்களிடம் சிக்கி இருக்கிறாள்.

    ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்குள் கொண்டு சென்று குண்டும் குழியுமாக கிடந்த ரோட்டில் வைத்து அந்த பெண்ணை 4 பேரும் சித்ரவதை செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே மாத விடாய் வலியால் தவித்த அந்த பெண் நாலு மிருகங்களிடமும் கதறி இருக்கிறார். ஆனால் அவர்களுக்கு இரக்கம் வரவில்லை.

    இரவு 12.15 மணி முதல் 2.15 மணி வரை குரூரமாக நடந்து இருக்கிறார்கள். உடலில் ரத்தம் வழிய துடித்த அந்த பெண்ணை ஆடைகளை சரி செய்ய சொல்லி அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டுள்ளார்கள்.

    அப்போது தினேஷ் ஒரு மொபைல் எண்ணை ஆட்டோ டிரைவரிடம் சொல்லி அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள சொல்லி இருக்கிறான்.

    அந்த எண்ணை அந்த பெண் மனப்பாடம் செய்து கொண்டார். செல்போனில் தொடர்புகொண்ட அந்த நபர் வந்ததும் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று ஓட்டலில் இறக்கி விட்டுள்ளார்கள்.

    அப்போது நடந்த விபரங்களை வெளியே சொன்னால் இங்கு வேலை பார்க்க முடியாது. தொலைத்து விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

    நள்ளிரவில் ரத்த காயங்களுடன் வந்து நின்ற தோழியை பார்த்து நடந்த விபரங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக டெல்லியில் உள்ள வங்கி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரித்து இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் நடந்த விபரங்களை கேள்விப்பட்டு டெல்லியில் இருந்து அவரது தந்தை கும்பகோணத்துக்கு விரைந்து வந்தார். நடந்த விபரங்களை சொல்லி தந்தையிடம் கதறி அழுதார்.

    அந்த பெண் மனதில் பதிந்து வைத்திருந்த செல்போன் நம்பரை வைத்துதான் போலீசார் துப்புதுலக்கி 4 பேரையும் கைது செய்து இருக்கிறார்கள்.

    கைது செய்யப்பட்டவர்களில் புருசோத்தமன், அன்பரசு ஆகியோருக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    பரிசோதனைக்குப் பிறகு இருவரும் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    முதலில் அந்த பெண்ணை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவருக்கும் இந்த வாலிபர்களுக்கும் தொடர்பு உண்டா? அவர் சுற்றி சுற்றி சென்று நடு வழியில் இறக்கிவிட்டது ஏன்? என்பது தெரியவில்லை. எனவே அவரை தேடி வருகிறார்கள்.

    பாலியல் பலாத்காரத்துக்கு மூலகாரணமாக விளங்கும் அந்த ஆட்டோ டிரைவரை இதில் குற்றவாளியாக அறிவித்து அவரை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை அழைத்துச் சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் கும்பகோணத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் போராடி வருகிறார்கள்.

    குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என்று வக்கீல்களும் முடிவு செய்து இருக்கிறார்கள். #kumbakonamdelhigirlmolestation

    கும்பகோணத்தில் டெல்லி இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்திற்கு கடந்த 2-ந்தேதி நள்ளிரவு டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் வங்கி பணிக்காக வந்திருந்தார். அந்த பெண் வழிதெரியாமல் நின்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வசந்த், தினேஷ், அன்பரசன், புருசோத்தமன் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் டெல்லி பெண், கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கும்பகோணத்தில் மாதர் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் இன்று வக்கீல்கள், பாதிக்கப்பட்ட டெல்லி பெண்ணிற்கு ஆதரவாக கோர்ட்டு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் மாதர் சங்கத்தினரும், பல்வேறு அமைப்பினரும் குற்றவாளிகளுக்கு தகுந்த நடவடிக்கை கிடைக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர்.

    கும்பகோணத்தில் நள்ளிரவில் டெல்லி பெண் ஊழியரை கற்பழித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #kumbakonamgirlmolestation

    கும்பகோணம்:

    டெல்லியில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் 23 வயது நிரம்பிய இளம்பெண்ணுக்கு பதவி உயர்வுக்கான பயிற்சி கும்பகோணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இதற்காக அந்த பெண் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்து கடந்த 2-ந் தேதி திருச்செந்தூர் ரெயிலில் இரவு 10.30 மணிக்கு கும்பகோணம் சென்றார்.

    ஏற்கனவே பயிற்சிக்கு வந்திருந்த தனது தோழிகளுடன் தொடர்பு கொண்டு ரெயில் நிலையத்திற்கு வருமாறு கூறினார். அந்த சமயத்தில் மழை பெய்ததால் ரெயில் நிலையத்தில் காத்திருக்குமாறு கூறினர்.

    நீண்ட நேரமாகியும் வராததால் அந்த இளம்பெண் தன் தோழிகளிடம் தொடர்பு கொண்டு அவர்கள் தங்கி உள்ள ஓட்டல் விவரங்களை கேட்டார்.

    நள்ளிரவில் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் ஓட்டலுக்கு சென்றார். ஆட்டோ டிரைவர் வெவ்வேறு பாதைகளில் சுற்றி சுற்றி வந்ததால் பயந்துபோன இளம்பெண் அழுது கூச்சலிட்டார்.

    இதனால் அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பெண்ணை செட்டி மண்டபம் பைபாஸில் நள்ளிரவில் நடுவழியில் இறக்கி விட்டு சென்றார்.

    அப்போது அங்கு 4 வாலிபர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அவர்களிடம் ஆங்கிலத்தில் ஓட்டல் வழியை கேட்டார். உடனே ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் பெண்ணை அழைத்து சென்றார். அந்தப் பெண்ணிற்கு பின்னால் மற்றொரு வாலிபரும் ஏறிக்கொண்டார். நாச்சியார்கோவில் பைபாஸ் ரோட்டிற்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    மது அருந்திக் கொண்டிருந்த மற்ற 2 பேரையும் செல்போன் மூலம் வரவழைத்து 4 பேரும் சேர்ந்து கொடூரமாக கற்பழித்தனர். 2 மணி நேரம், காம கொடூரர்களுடன் போராடினார்.

    பின்னர் அந்தப் பெண்ணை வாலிபர்களில் ஒருவர் நாச்சியார்கோவில் மெயின் ரோட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அந்தப் பெண்ணும் வாலிபரும் ஏறிக்கொண்டனர்.

    கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே ஆட்டோவை நிறுத்தி அந்த வாலிபர் இறங்கி கொண்டார். அவர் ஆட்டோ டிரைவர் செல்போனில் தனது நண்பருடன் பேசி வரவழைத்தார். அவர் வந்ததும் ஆட்டோ டிரைவரிடம் அந்தப் பெண்ணை ஓட்டலில் விடுமாறு கூறி நண்பருடன் சென்றுவிட்டார்.

    அந்தப் பெண் தன்னை வந்து இறக்கிவிட்ட ஆட்டோ எண்ணை குறித்து வைத்துக் கொண்டார். முன்னதாக வாலிபர் தனது நண்பருடன் பேசும் போது அவர் சொன்ன செல்போன் எண்ணையும் மனதில் பதிய வைத்திருந்தார்.

    அதன் பிறகு இளம்பெண் ஓட்டலில் தங்கியிருந்த தோழிகளிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கூறினார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும், பெற்றோருக்கும் தெரிவித்தனர்.

    இந்த கொடூர பாலியல் பலாத்கார சம்பவத்தை போலீசார் வெளியில் தெரிவிக்காமல் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பெண்ணை ஓட்டலில் இறக்கி விட்ட ஆட்டோ டிரைவர் கும்பகோணம் மேற்கு போலீசில் தகவல் தெரிவித்தார். அதன் பிறகு டெல்லியில் இருந்து வந்த இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    அப்போது அந்த பெண் தான் வந்து ஓட்டலில் இறங்கிய ஆட்டோ பதிவு எண்ணையும், தான் மனதில் பதிந்து வைத்திருந்த வாலிபர் கூறிய செல்போன் எண்ணையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் சிக்கினார். அந்த செல்போன் எண் கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மகன் வசந்துக்கு உரியது என தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவரும் அவருடைய நண்பர்களான தினேஷ் (24), புருஷோத்தமன் (19), அன்பரசன் (19) ஆகிய 4 பேரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து 4 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இளம்பெண் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    பின்னர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். முன்னதாக கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர்களிடம் கடுமையாக விசாரணை நடத்தினார்.

    இதில் 4 வாலிபர்களுக்கும் காயம் ஏற்பட்டதால் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெறுகிறது. #kumbakonamgirlmolestation

    ×